பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி - குடும்பத்தினருக்கு ஆறுதல்


தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் அவர்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால், இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்காது என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தூத்துக்குடி சென்றார். அலங்காரத்தட்டில் உள்ள பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பசுபதி பாண்டியனின் தம்பி தாமோதரனிடம் கொலை சம்பவம் குறித்து விபரங்களை  கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. பசுபதி பாண்டியன் கொலை காட்டுமிராண்டித் தனமானது. கூலிப்படையை ஏவி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் இந்த படுகொலையை செய்துள்ளது. 

படுகொலைக்கு முந்தைய நாள் பசுபதி பாண்டியன் முல்லைப்பெரியாறு அணைக்காக தேனியில் உண்ணாவிரதம் இருந்தார். தலித் மக்கள் தலைவராக இருந்து வந்த பசுபதி பாண்டியன் கொலையில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஒருசிலர் பொறுப்பேற்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. 

இறுதி ஊர்வலத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறி 500பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டு்ம். தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுதும் தொடர்கிறது. 

தலித் தலைவர் என்பதால் 3முறை தாக்கப்பட்டவர் என்பதை அறிந்த போலீசார் பசுபதி பாண்டியனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்காது. சாராய வியாபாரிகளுக்கும், தனி செல்வாக்கு உள்ளவர்களுக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்குகிறார்கள். போலீசாரின் அலட்சியத்தால் கொலை நடந்துள்ளது.

மக்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. பொது நிகழ்ச்சி, இறுதி ஊர்வலம் போன்றவற்கு போலீசார் போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை. கொலை நடந்து அரைமனி நேரத்திற்கு பின்னர்தான் போலீசார் அங்கு சென்றுள்ளனர். தலித் தலைவர்கள் மீதான இந்த தாக்குதல்களை கண்டித்து, தோழைமைக் கட்சிகளுடன் சேர்ந்து ஆலோசித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்றார். 








0 கருத்துகள்:

கருத்துரையிடுக